புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடையாத்துப்பட்டி செல்லும் சாலையில் நேற்று (பிப்ரவரி 6) இறந்த நிலையில் மான் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் மானை மீட்டு, இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.