அறந்தாங்கி: கடைவீதியில் அட்டகாசம் செய்த காட்டெருமை

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடைவீதியில் நேற்று (மே 22) மாலை காட்டெருமை ஒன்று சுற்றித்திரிந்ததால் அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் அச்சமடைந்தனர். சாலையில் ஓடிய காட்டெருமையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சிலர் ஆபத்தை உணராமல் அதன் பின்னால் சென்று வீடியோ எடுத்தனர். இதனையடுத்து, வனத்துறையினர் காட்டெருமையை மீட்டு பாதுகாப்பாக வனப்பகுதியில் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி