சுப்ரமணியபுரம் AD காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் (37). இவர் கடந்த டிச. 16ம் தேதி வீட்டிலிருந்து அறந்தாங்கிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கூகனூர் பஸ் ஸ்டாப் அருகே திடீரென சாலையில் குறுக்கே வந்த நாய் மீது மோதியுள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.