அறந்தாங்கி அடுத்த கருமேனி ஓடையைச் சேர்ந்த கருப்பையா (50) என்பவர், குழந்தை இல்லாததாலும், மனைவி 20 வருடங்களாக பிரிந்து வாழ்வதாலும் வாழ்க்கையில் வெறுப்புற்று நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது சகோதரர் ஆண்டி அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.