அப்போது, மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த நிலையில், மூதாட்டி உள்ளே நுழைந்ததும் மர்ம நபர் ஒருவர் கழுத்தை கையால் இறுக்கி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார். அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிட்டார். ஆனால், அருகில் வசித்தவர்களுக்கு சத்தம் கேட்கவில்லை.
சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய மகனிடம் நடந்த சம்பவம் பற்றி மூதாட்டி தெரிவித்தார். இதுபற்றி லாரன்ஸ் மாத்தூர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சட்டநாதன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.