கோவிலூர் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று(செப்.15) ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விளக்கு பூஜை விழாவில் 301 பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும், நல்ல மழை பெய்ய வேண்டியும் சிறப்பு கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.