ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் அடுத்த தெற்கு செட்டியாப்பட்டி, செரியன் தெருவைச் சேர்ந்தவர் சமயபுரம் கோவிலுக்கு சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்களது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான 3 லட்ச ரூபாய்கான காசோலையினை குடும்பத்தினரிடம் வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் அருணா உடன் இருந்தார்.