புதுக்கோட்டையிலிருந்து பொன்னன்விடுதிக்கு பைக்கில் சென்ற சுகுமார் (35) என்பவர், அரசடிபட்டி பாலம் அருகே எதிரே வந்த சபாபதி (35) பைக்கில் மோதியதில் பலத்த காயமடைந்து புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.