ஆலங்குடி அருகே வாகன விபத்தில் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆயிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பிள்ளை (65). இவர் ஆலங்குடி - புதுக்கோட்டை சாலையில் நடந்து செல்லும்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து புதுகை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி