புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி கொன்னக்காடு பகுதியில், அறந்தாங்கி முதல் சுப்பிரமணியபுரம் வரை புதிய வழித்தட மினி பேருந்து சேவையை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். அவர் இனிப்புகள் வழங்கி சிறப்பித்த இந்த நிகழ்வில், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.