புதுக்கோட்டை: கூலி தொழிலாளி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை

புதுக்கோட்டை திருவரங்குளம் பாரதியார் நகரை சேர்ந்தவர் பவுல்ராஜ் (57). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பவுல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி