வெண்ணாவல்குடியில் குட்கா விற்றவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வெண்ணாவல்குடி, இராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா (63). இவர் வெண்ணாவல்குடியில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 40 கிராம் மதிப்புள்ள குட்கா பொருளை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி