புதுகை: ஜல்லிக்கட்டில் இரு தரப்பினர் இடையே மோதல்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே இருந்தரப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

இந்த நிலையில் வாடி வாசலில் இருந்து ஒவ்வொன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தற்போது அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர். இந்த போட்டியில் காளையின் உரிமையாளர் மாடுபிடி வீரரிடம் 'ஏன் என் காளையை பிடித்தாய்' என்று வாய்வார்த்தை மூலமாக கேட்டுள்ளார். மாடுபிடி வீரர் 'மாடு பிடிப்பதற்கு தானே கொண்டு வந்தாய், அதனால் பிடித்தேன். நீ என்னவேணுமானாலும் செய்' என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காளையின் உரிமையாளருக்கும் மாடுபிடி வீரருக்கும் வாக்குவாதம் முற்றியதில் இருவரும் கைகலப்பாக ஏற்பட்டது. 

இந்த தகராறை அருகில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி இருவரையும் சமாதானப்படுத்தினர். இதில் யாரும் கேட்காததால் சிறிது தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் சிறிது நேரம் களத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி