புதுக்கோட்டை மாவட்டம் ராயப்பட்டியிலிருந்து வடவாளத்திற்கு பைக்கில் சென்ற பழனி (55) என்பவர், மங்கனாம் பட்டி சாலையில் எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பழனி அளித்த புகாரின் பேரில், போலீசார் காரை ஓட்டி வந்த ஜான் சுந்தர் (31) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி பிணையில் விடுவித்தனர்.