கீரமங்கலம் காவல்துறையினர் நெய்வத்தலி, வெள்ளூரணி ஆற்றுப் படுகை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அடையாளம் தெரியாத மாட்டு வண்டி மற்றும் ஒரு யூனிட் மணல் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையினர் அவற்றை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். அந்த மாட்டு வண்டி யாருடையது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.