புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே நெம்மக்கோட்டை ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய விழாவான தேர் திருவிழா நடைபெற்றது. இதில் தோல் சித்திவிநாயகருக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். பாதுகாப்பு பணியில் ஆலங்குடி காவல் துறையினர் ஈடுபட்டனர்.