புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் சமீப காலமாக கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சாலைகளில் மாடுகள் சாலையின் நடுவே சுற்றித் திரிவதால் வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதில் சில நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.