உள் விளையாட்டு அரங்கில் மர தரை: திறந்து வைத்த முதலமைச்சர்

புதுச்சேரி அரசு, விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குநரகம் சார்பில், புதுச்சேரி, காலாப்பட்டு தொகுதி, லாஸ்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் இருந்த மொசைக் தரையை ரூ. 1. 05 கோடி செலவில் மரத்திலான தரையாக மாற்றி அமைக்கப்பட்டது.

மரத்திலான தரைதளம் திறப்பு, தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இன்று (அக்.,4) விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு புதிய மரத்திலான தரை தளத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

நிகழ்வின் போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அரசுச் செயலர் தல்வாடே, துறை இயக்குநர் பிரியர்தர்ஷினி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி