புதுவை சேத்திலால் அரசு உயர் நிலை பள்ளியில் முப்பெரும் விழா

புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குதல், புதுப்பிக்கப்பட்ட கணினி ஆய்வகம் திறத்தல், 2024-2025 சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், ஆகிய முப்பெரும் விழா அபிஷேகப்பாக்கம் சேத்திலால் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் டார்லிங் வின்சி இந்திரா தலைமை தாங்கினார். 

ஆங்கில பட்டதாரி ஆசிரியை கலைவாணி வரவேற்புரையாற்றினார். புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகரும் செல்வம் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கியும், புதுப்பிக்கப்பட்ட கணினி ஆய்வகத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும், கடந்த 2024-2025 கல்வியாண்டில் சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார். பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளர் தேவி, ஊர்ப் பிரமுகர்கள், பள்ளி மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி