இத்திட்டத்தின் கீழ் ஆளில்லா வானூர்தியை (ட்ரோன்) பயன்படுத்தி மறு நில அளவை மேற்கொண்டு, புவி அமைவிட புள்ளிகளுடன் கூடிய புதிய வரைபடங்களை உருவாக்க திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல் கட்டமாக இத்திட்டம், புதுச்சேரி முருங்கப்பக்கம் வருவாய் கிராமத்தில் இன்று செயல்படுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், குலோத்துங்கன் துணை மாவட்ட ஆட்சியர் இஷிதா ரதி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தத் திட்டத்திற்கு முருங்கப்பக்கம் வருவாய் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் நில உடைமை தாரர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகம் வரும் பிரதமர் மோடி.. விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாட்டம்