புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்று தொழுகை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இதுபோல் புதுச்சேரியில் உள்ள குத்பா பள்ளிவாசல், அகமதியா பள்ளிவாசல், மீரா பள்ளிவாசல், சுல்தானியா பள்ளிவாசல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சுல்தான்பேட்டையில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் மைதானத்தில் முத்தவல்லி முகமது தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகை செய்து, ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.