இதனையொட்டி மண் வழிபாடு புனித நீர் வழிபாடு, நலப்பதி வேள்வி, புதிய சிலைக்கு அருட்கண் திறப்பித்தல், சக்கரம் பதித்தல், காப்பு அணிவித்தல், வேள்வி சாலை நுழைவும், வழிபாடு நடந்தது. தொடர்ந்து சிவசுப்ரமணிய சுவாமிக்கு, புனித நீர் ஊற்றி தமிழில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, காங்., பிரமுகர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, பிள்ளையார்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
புதுச்சேரி
கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி வாரிசுதாரர்கள் உண்ணாவிரதம்