போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சேர்ந்த ராஜ்குமார். இவர் (16) வயது சிறுமியுடன் பழகி, கடந்த ஆண்டு திருமணம் செய்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தாயார் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் ராஜ்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 7,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி