புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் 2.0 மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கைலஷ்நாதன் மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.