கொடி ஏற்றியதால் பிரச்சனை.. தவெக - CPM இடையே மோதல்

நாகப்பட்டினம் பெருங்கடம்பனூர் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கொடியேற்றியதாக தெரிகிறது. இதனால், இரண்டு கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சிபிஎம் விவசாய அணி ஒன்றிய செயலாளர் மாரிமுத்துவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தவெக நிர்வாகிகள் இளங்கோவன், துரை ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி