காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்வதை கருத்தில் கொண்ட தமிழக அரசு, மாடித்தோட்டம் அமைத்து காய்கறிகளை விளைவிப்பதை ஊக்குவிக்கிறது. இதற்காக மானிய விலையில் தேவையான பொருட்களையும் வழங்கி வருகிறது. மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை நிரப்பி தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். https://www.tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளம் மூலமாகவும் ஆர்டர் செய்து வாங்கலாம்.