சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒரு டன் விறகு விலை ரூ.6,000-ல் இருந்து ரூ.8,000 ஆக அதிகரித்துள்ளது. வணிக எரிவாயு சிலிண்டர், வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள், விடுதிகள், டீக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன. எரிவாயு குடோன்களில் தட்டப்பாடு நிலவுவதால் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்படுவதில்லை. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறத் தொடங்கியதால், அதன் விலையும் அதிகரித்துள்ளது.
நன்றி: புதிய தலைமுறை