வலியுடன் போராடிய கர்ப்பிணி.. தூக்கிக் கொண்டு ஓடிய இளைஞர்கள

சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மதியம் 1 மணிக்கு முடிந்தது. இதன் காரணமாக சாலையில் பொதுமக்கள் கூட்டல் அலைமோதியது. இந்த நிலையில், கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியுடன் ஆம்புலன்ஸில் சென்றுள்ளார். கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. உடனடியாக இளைஞர்கள் சிலர் அந்த கர்ப்பிணியை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி