ஆப்கானிஸ்தான் நாட்டில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் காபூல் நகருக்கு வடகிழக்கே உள்ள பாஞ்ச்ஷீர் மாகாணத்தை மையமாகக் கொண்டு, 90 கிமீ ஆழத்தில் இந்த அதிர்வு பதிவானது. மாலை 5:40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காபூல் மற்றும் நங்கர்ஹார், பமியான், வர்தக் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. இதுவரை உயிரிழப்பு அல்லது பெரிய சேதங்கள் குறித்த தகவல்கள் இல்லை.