பொங்கல் பண்டிகை.. ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை மூன்று மடங்கு வரை உயர்த்தி வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கமாக நெல்லை, நாகர்கோவிலுக்கு ரூ.800-க்குச் செல்லும் கட்டணம் தற்போது ரூ.2,000 முதல் ரூ.4,200 வரை வசூலிக்கப்படுகிறது. சென்னை-மதுரைக்கு ரூ.700-1100-க்கு பதில் ரூ.3,500, சென்னை-கோயம்புத்தூருக்கு ரூ.800-1200-க்கு பதில் ரூ.3,000 என கட்டணம் உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி