பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரூ.3,000 ரொக்கப் பணம் மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்குவதை மக்கள் வரவேற்றுள்ளனர். இருப்பினும், இந்த தொகையை கொடுத்துவிட்டு மின்சாரம், பேருந்து கட்டணம் மற்றும் வீட்டு வரியை உயர்த்தக் கூடாது என தமிழக முதலமைச்சருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பரிசாக பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு உள்ளிட்டவை கடந்த 8ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.