பொள்ளாச்சி சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. நீதிமன்றம் மொத்தம் 85 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்ட நிலையில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், “நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி