உ.பி., மாநிலம் மீரட்டை சேர்ந்த பெண் போலீஸ் சந்தியா பரத்வாஜ், பல வழக்குகளில் குற்றச்சாட்டுகள் உள்ள ரவுடி அங்கித் சவுகானை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் இருந்தபோது அவருடன் காதல் மலர்ந்துள்ளது. இதற்கிடையில், காவலர் ஒருவருடன் சந்தியாவுக்கு திருமண நிச்சயம் நடந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த காதலனுடன் சந்தியா வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நின்றுபோனது.