சேலம் சீலநாயக்கன்பட்டி தாளமுத்து நடராஜன் மைதானத்தில் நாளை (பிப்.13) நடைபெறவுள்ள தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்கு, 51 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், கூட்ட அரங்கு அருகே மலைப்பகுதி இருப்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காக யாரும் மலை ஏறக்கூடாது என மாநகர காவல் துணை ஆணையர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக இந்த நிகழ்வு மக்கள் சந்திப்பாக திட்டமிடப்பட்டு, பின்னர் நிர்வாகிகளின் சந்திப்பு கூட்டமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி:News18