தெருநாயை தாக்கிய போலீஸ்.. தோப்புக்கரணம் போட வைத்த பொதுமக்கள்

மும்பையில், காவலர் ஒருவர் தெருநாயை லத்தியால் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த காவலரை தோப்புக்கரணம் போட வைத்து, ‘இனி இப்படி செய்ய மாட்டேன்’ என பொதுமக்கள் மன்னிப்பும் கேட்க வைத்தனர். ‘நாய்க்கு ஏதேனும் ஆனாலோ அல்லது அதன் நிலைமை மோசம் அடைந்தாலோ அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என மிரட்டல் விடுத்த பொதுமக்கள், நாய்க்கு எதுவும் ஆகக்கூடாது என வேண்டிக் கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி