PM கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 22வது தவணை ரூ.2,000 தொகை சிலருக்கு கிடைக்காமல் போகலாம். வங்கி கணக்குடன் ஆதார் இணைக்காதது, e-KYC முடிக்காதது அல்லது Unique ID பெறாதது காரணமாக சிக்கல் ஏற்படும். எனவே, நில ஆவணங்கள், சிட்டா மற்றும் ஆதார் இணைந்த மொபைல் எண்ணுடன் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து Unique ID பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.