பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தின் கீழ், 20வது தவணைத்தொகை நாளை (ஆகஸ்ட் 2) விடுவிக்கப்படுகிறது. உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி PM கிசான் திட்டத்துக்கான நிதியை விடுவிக்கிறார். இதன் வாயிலாக ரூ.2000 தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். நாளை முதல் விவசாயிகள் பிரதமரின் நிதிஉதவித்தொகையை எதிர்பார்க்கலாம்.