குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. குறித்த விமானத்தில் 242 பயணிகள் இருந்துள்ளனர். விமானத்தில் இருந்து படுகாயங்களுடன் பயணிகள் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். விமானமானது மக்கள் கூட்டம் நிறைந்த குடியிருப்பு, அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் விழுந்தது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.