திருவனந்தபுரத்தில் நேற்று (மே 14) நடைபெற்ற சிபிஎம் மாநிலக் குழுக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் கேரளம் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் புதிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கிறார். இடதுசாரி ஜனநாயக முன்னணி சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து தலைமை மாற்றம் கோரிக்கை எழுந்த நிலையில், பினராயி விஜயனின் அனுபவம் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசன் புதிய முதலமைச்சராகவும் பொறுப்பேற்கின்றனர்.