அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வளர்ப்பு நாய் ஒன்று உரிமையாளர் முதுகில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 53 வயது நபர் ஒருவர், தனது துப்பாக்கியை சுத்தம் செய்துவிட்டு அதனை படுக்கையில் வைத்துவிட்டு அருகில் படுத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது வளர்ப்பு நாய் அந்த துப்பாக்கியின் மேல் குதித்தபோது ஓனரின் முதுகில் சுட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓனர் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.