திருச்சியில் தூய்மை பணியாளரிடம் ஆறு பவுன் செயின் பறிப்பு

திருச்சி கருமண்டபம் ஜெயா நகர் பகுதி சேர்ந்தவர் ஜஸ்டின் கிளாரா இவர் அப்பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடந்த நேற்று பணி முடிந்து வீட்டுக்கு நடந்து செல்லும்போது, அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறு சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். இச்சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி