மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில செயலாளர் அரவிந்தசாமி, மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பேசினார் கூட்டத்தில், மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில்,கல்வி வளர்ச்சி நிதியைத் தராத மத்திய அரசைக் கண்டித்தும், மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும் வரும் பிப்ரவரி -25ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம், மற்றும் திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மாணவர் சங்கங்களுடன் இணைந்து, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?