பெரம்பலூர்: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 18.06.2025 அன்று "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாம் நடைபெறுகிறது. அன்றைய தினம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற உள்ளனர். 

மேலும், அன்றைய தினம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் குறுவட்ட பகுதிக்கு கொளக்காநத்தம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், கூத்தூர் குறுவட்ட பகுதிக்கு கூத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் மற்றும் செட்டிக்குளம் குறுவட்ட பகுதிக்கு செட்டிக்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெறவுள்ளது. "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தில் கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்தும் மற்றும் பட்டா மாறுதல் சிறப்பு முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி