பெரம்பலூர்: திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெரியாண்டவர் கோவில் பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த 1. ராஜீவ்காந்தி (37) 2. செல்லமுத்து (48) 3. மணிவேல் (49) ஆகிய 3 நபர்களை விசாரணை செய்ததில் அவர்கள் மூவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் மேலும் விசாரணை செய்ததில் இவர்கள் மூவரும் பெரம்பலூர், பாடாலூர், குன்னம் ஆகிய பகுதிகளில் கோவில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் மூவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்த குன்னம் காவல்துறையினர் அவர்களிடமிருந்து ரூபாய் 38,000 பணம் 2 கிராம் தாலி ஆகியவற்றைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் இன்று 15.06.2025-ம் தேதி குற்றவாளிகள் மூவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி