அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றம் நடவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள், ரவுடிகள், சந்தேக நபர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று இன்று 08. 08. 2024 -ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் மேற்படி குற்றப்பின்னனி உடைய நபர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தும், அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏதேனும் உள்ளவாறு நடந்து கொண்டுள்ளார்களா என்பதையும் தீவிரமாக விசாரணை செய்தனர்.