இதனையடுத்து அருகில் உள்ள கட்டிடங்கள் மற்றும் பொது மக்களுக்கு சேதம் ஏற்படாதவாறு மிகுந்த பாதுகாப்புடன் பழுதடைந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் இன்று காலை திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த நீர்நிலை தேக்க தொட்டி உடைக்கும் ஊழியர்கள் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் பில்லர் தூண்களை லாவகமாக உடைத்து பத்திரமாக அந்த தொட்டியை இடித்து தள்ளினர்.
பழுதடைந்த பழைய மேல்நிலை நீர் தேக்க தொட்டி பாதுகாப்புடன் இடிக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து வருகின்ற சில தினங்களில் இதனை முழுவதுமாக அப்புறப்படுத்தி விட்டு அதே இடத்தில் புதிய மேல்நிலைத் தேக்கத்தொட்டி கட்டுவதற்கு உண்டான பணிகள் துவங்கும் என்று ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.