தமிழக அரசின் சார்பில், விலையில்லா சீருடைகள் ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் சமூக நலத்துறையின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 416 அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 15, 326 மாணவர்கள், 15, 183 மாணவிகள் என மொத்தம் 30, 509 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் இன்று அரணாரை அரசு நடுநிலைப் பள்ளியில் 124 மாணவ மாணவியர்களுக்கு பள்ளி சீருடைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ) அண்ணாதுரை, பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மீனா அண்ணாதுரை, மாவட்ட நமூகநல அலுவலர் (பொ) ஜெயஸ்ரீ, பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி