கூட்டத்தில், கலெக்டர் அலுவலக வாரண்டாவில் அமர்வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே கலெக்டர் சென்று, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர், வருவாய் துறையின் சார்பில் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு விபத்து மரண உதவித்தொகையாக ரூ.1,02,500க்கான காசோலையினையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.22,500 மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகைக்கான காசோலைகளையும், 4 பயனாளிகளுக்கு ரூ.34,000 மதிப்பீட்டில் திருமண உதவித்தொகைக்கான காசோலைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.11,445 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிளையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.890 மதிப்பீட்டில் ஊன்றுகோலையும் என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ.2,51,170 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்டக் கலெக்டர் வழங்கினார்.