திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது டிராக்டர் ஓட்டுநர் தீபக், பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூரில் உள்ள அரிசி ஆலையில் உமி ஏற்றச் சென்றபோது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாடாலூர் போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.