பெரம்பலூர்: கல்வி உபகரணங்கள் வழங்கிய அமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (02.06.2025) சென்னை திருவல்லிக்கேணி லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கித் தொடங்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிச் சீருடைகள், பாடநூல்கள் மற்றும் புத்தகப் பையை போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் இன்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வழங்கினார். 

இந்நிகழ்வில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கள் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 429 அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் 53,877 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிச் சீருடைகள், புதிய பாடநூல்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட உள்ளன என்றார்.

தொடர்புடைய செய்தி